15. நீதான் என் சந்தோசம் - ராசு
அந்த கட்டிடத்தின் முன்பு வந்து நிற்கும் போதே அவள் பிரமித்து போனாள்.
அவளது அன்னை சொல்லும் போது மாப்பிள்ளை குடும்பம் வாழ்ந்து நொடித்த குடும்பம் என்றும் அவன் தலையெடுத்துதான் குடும்பம் மீண்டும் முன்னேறியது என்றும் கூறியிருந்தாள்.
அசுர வளர்ச்சிதான் என்று பாராட்டாக தோன்றிய உடனே தன்னையே கடிந்துகொண்டாள்.
தான் வந்த வேலை என்ன? இப்போது செய்துகொண்டிருப்பது என்ன?
அத்துடன் வேறு ஒன்றும் அவள் கண்ணில் பட்டது.
சிறந்த தொழிலதிபர்க்கான இந்த ஆண்டு விருதை வாங
...
This story is now available on Chillzee KiMo.
...
?”
“கொடுப்பதுதான் திரும்ப பதிலுக்கு வரும்.”
“ஓ! நான் உன்னை ஒருமையில் கூப்பிடுவதை சொல்கிறாயா? தரகர் கொண்டு வந்த போட்டோவை என்னிடம் காட்டினார்கள். ஒத்து வந்தால் நீ எனக்கு மனைவி. அதான் ஒருமையில் கூப்பிட்டேன். அதில் என்ன தவறு இருக்கிறது?”
“போனில் பேசும்போது மரியாதை வந்ததே?”