அந்தாளும் அதுக்குத்தான் பணம் கொடுத்ததா சொல்லிட்டான்.... என்னை யாரும் பேசக்கூட விடலை.... அந்தாளை வார்ன் பண்ணி விட்டுட்டு என்னை மட்டும் கூட்டிட்டு போய்ட்டாங்க.... அந்தக் கேஸ் நடக்கும்போதுதான், என்கூட செல்லுல இருந்த ஒருத்தங்க மதி சார் பத்தியும் அவங்க மனைவி பத்தியும் சொன்னாங்க..... நான் என்னோட தண்டனைக் காலம் முடிஞ்சு வந்து அவரைப் பார்த்து விஷயம் சொன்னேன்... அவருக்கும் முழு விவரம் தெரியாது.... இதோ இப்போதான் உங்ககிட்ட என் கதை முழுக்க சொன்னேன்.... அந்த நரேஷை எந்த விதத்துலயானும் நான் பழி வாங்கணும்.... எனக்குன்னு யாரும் இல்லை... இதனால என்னோட உயிருக்கு பாதிப்பு வந்தாக்கூட பிரச்சனை இல்லை...”
“உங்க கோவம் புரியுது.... இருந்தாலும் உங்களுக்கு நடந்த விஷயத்துல உங்க மேலயும் நிறைய தப்பு இருக்கு.... அவன் சொல்றான்னு யாருக்கும் தெரியாம கல்யாண பண்ண ஒத்துக்கிட்டது ஆரம்பிச்சு அவன் விட்டுட்டு போயிட்டான்னு சும்மா இருந்தது வரை... ஆனா அதைப் பத்தி பேசி இனி ஒண்ணும் ஆகப் போறது இல்லை... நாம இப்போ இருக்கற வழக்கை பார்ப்போம்.... கொஞ்ச நாள் இந்த வீட்டுல நீங்க இருக்க வேண்டாம்... இந்தக் கேஸ் முடியறவரை உங்களுக்கு நான் இருக்க இடம் ஏற்பாடு பண்றேன்..... உங்களுக்கு ரொம்பத் தேவையான சாமான் மட்டும் பாக் பண்ணி வைங்க.... நான் போய் உங்களுக்கு இடத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு கால் பண்றேன்.... நீங்க அங்க வந்துடுங்க.....”
“சரிங்க நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே பண்ணிடறேன்....”, ராணியிடம் விடைபெற்று மாரியின் ஏரியா நோக்கிப் பறந்தாள் பாரதி.
“டேய் சப்பாணி எங்கடா இருக்க....”
“மாரி வீட்டுல இருக்கேன் பாரதி.... நீ அந்த நடிகையை பார்த்துட்டு வீட்டுக்கு வந்துட்டியா...”
“நானும் மாரி வீட்டு வாசல்லதான் இருக்கேன் இரு உள்ள வரேன்....”, உள்ளே நுழைந்த பாரதியை மாரியின் அன்னை வரவேற்றார்.
“மாரி உன் தோஸ்த்து கிட்ட பேசிட்டியா... என்ன சொன்னான்...”
“அவங்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் தங்கச்சி.... அவனும் அந்தாளை யார் பார்க்க வராங்க எல்லாம் கவனிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்கான்...”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மாரியின் தங்கை ஒரு பெண்ணுடன் உள்ளே வந்தாள்.... அவளைப் பார்த்தவுடன் சாரங்கனுக்கு வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருள ஆரம்பித்தது.... Backgorund-ல் இளையராஜா music வாசிக்க ஆரம்பித்தார்....
தொடரும்
{kunena_discuss:1100}