“இங்கப்பாரு மந்த்ரா… அன்னைக்கு உன்னைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டப்போ ரொம்ப கோபம் வந்தது உண்மை தான்… உன்னோடது உண்மையான காதல் இல்லன்னு நான் கோபப்பட்டேன்…. ஆனா அந்த கோபம் எனக்கு ரொம்ப நாள்ல்லாம் இல்ல… என்னவோ நீ என்னை டைம் பாஸ்க்கு காதலிச்சதா தோனல… அது உன்னோட பாஸ்ட், இப்பவும் நீ அப்படியிருக்க மாட்டன்னு மனசுக்குக்கு தோனிக்கிட்டே இருந்துச்சு… நீ திரும்ப வந்து அதை தெளிவுப்படுத்துவன்னு காத்துக்கிட்டு இருந்தேன்… ஆனா நீ வரல…
சரி நானா உன்னைப் பார்க்க வரலாம்னு நினைச்சப்ப தான், சஞ்சய் என்னை பார்க்க வந்தான்… அவங்களை பழிவாங்க நீ செஞ்சத பத்தியெல்லாம் சொன்னான்… திரும்ப உன் மேல கோபம் வந்து, உன்னைப் பத்தி தப்பாவே என்னை நினைக்க வச்சுது… ஆனா என்னால உன்னை மறக்க மு
...
This story is now available on Chillzee KiMo.
...
்தப்பந்தங்களை கூப்பிட்டு உங்க நிச்சயத்தை முடிச்சுடுவோம்… அடுத்து கல்யாணமும் உடனே வைக்கனும்… சீக்கிரம் நம்ம மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகனும்...சரி சரி லேட்டாகுது போய் ரெண்டுப்பேரும் சாப்பிடுங்க, நாம வேற கிளம்பனும் இல்லையா மோகன்.. போங்க போய் சாப்பிடுங்க..” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.