சஞ்சய் செய்த விஷயத்தைப் பற்றி சொன்னதும் நிகேதன் வாயைப் பிளந்தான்… “அடப்பாவி.. நீ ஒரு சாமியார்னு என் தங்கச்சிக்கிட்ட அடிக்கடி சொல்வேன்… நீ என்னடான்னா சாமியார் வேலையை அவக்கிட்டயே காமிச்சிருக்க… அதான் அவ இவ்வளவு கோபமா இருந்தாளாடா..??” அவன் கேட்க,
“டேய் ஒரு அண்ணன் மாதிரியாடா பேசற….” சஞ்சய் கேட்டதற்கு,
“டேய் இதெல்லாம் அயன் படத்துலேயே பார்த்தாச்சு விட்றா.. விட்றா…” என்றதும் இருவரும் சிரித்தார்கள்…
இங்கேயோ ஜானவி முகத்தில் ஈயாடவில்லை.. இந்த பூனையும் பால் குடிக்குமா..?? என்றிருந்த சஞ்சய் இப்படிக் கூட செய்வானா…?? அப்பா நிகேதனே பரவாயில்லைப் போல என்று நினைத்துக் கொண்டாள்.. தூங்கிக் கொண்டிருந்த ஜெய்க்குட்டி விழித்து சிணுங்கி அழுதான்…
“இந்த மந்த்ரா வேற இன்னும் காணோம்… சரி வெய்ட் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜானு, ஜெய்க்குட்டி இவங்களையெல்லாம் விட்டுட்டு வரனுமேன்னு இருக்கு… பொதுவா எல்லா பெண்களுக்குமே இந்த அவஸ்தை தான் தெரியுமா..??
“ம்ம் புரியுதுடா… உங்க வீட்டை நீ எப்பவும் மிஸ் பண்ணாத மாதிரி பார்த்துப்பேன் போதுமா..??”
“ம்ம் சோ ஸ்வீட்..” என்று சொல்லி அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்…