Name : உயிர் கேட்கும் அமுதம் நீ...! : Uyir ketkum amutham nee...!
Author : பிந்து வினோத் Bindu Vinod
இந்து, வீணா, கீதா மூவரும் நெருங்கிய தோழிகள்.
தந்தையின் திடீர் மரணத்தினாலும், முன்பு நிச்சயித்த திருமணம் எதிர்பாராமல் நின்றுப் போனதாலும், மன உளைச்சலில் இருக்கிறாள் இந்து. ஆனால் கீதாவின் கணவனின் தம்பி சஞ்சீவை சந்தித்தப் பிறகு இந்துவின் வாழ்க்கை வண்ணமயமாக மாறிப் போகிறது.
சஞ்சீவும் இந்துவை காதலிக்கிறான்! வீணாவும், கீதாவும் கூட இந்துவும் சஞ்சீவும் சரியான ஜோடி என நம்புகிறார்கள்.
ஆனால், சில பல காரணங்களால் சஞ்சீவ் – இந்து காதலில் பிரிவு ஏற்படுகிறது! இது, பல வருட நட்பிலும் கூட விரிசலை ஏற்படுத்துகிறது!
இந்து, வீணா, கீதாவின் நட்பு இந்த சோதனையை தாண்டி வெல்லுமா?
சஞ்சீவ் – இந்து காதல் வெற்றி பெறுமா?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.