(Reading time: 2 - 4 minutes)

அறிவிப்பு - சித்ரா வெ-யின் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்!

Nenchodu kalanthidu uravale

ன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

அழகான கதை, அருமையான நடை, உயிர்ப்பான கதாபாத்திரங்கள், அதனூடே காதல், நட்பு, பாசம் என எல்லாவற்றையும் சிறப்பாக கலந்து நம்மை தன் கதைகளால் வசியம் செய்திருக்கும் சித்ரா வெ, புதியத் தொடர் ஒன்றை விரைவில் தொடங்க இருக்கிறார்.

நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! எனும் இந்த புதிய கதை பற்றிய சித்ராவின் அறிமுகம் இதோ:

வணக்கம் தோழமைகளே, இன்னொரு புது தொடரோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.. கதையின் தலைப்பு நெஞ்சோடு கலந்திடு உறவாலே!!.

 

அன்பு, பாசத்துக்காக ஏங்கி, தனிமையிலேயே தன் வாழ்நாளை கடத்த நினைத்த நம் நாயகிக்கு, எதிர்பாராத விதமாக நாயகன் மூலம் அவளின் ஏக்கங்கள் பூர்த்தியாக,

 

நாயகன் மூலமாக கிடைத்த அன்பு, பாசத்தை வாழ்நாளும் முழுதும் தக்க வைத்துக் கொள்ள, அவனுடைய காதலில் மூழ்கி திளைக்க ஆசைக் கொண்டு, அதை அடையும் முயற்சியில் அவள் அறிந்தும் அறியாமல் சில தவறுகள் செய்துவிடுகிறாள். அதனால், நாயகன் மற்றும் அவன் குடும்பத்தாரின் கோபத்திற்கு ஆளாகிறாள். அவள் மேல் கொண்ட கோபத்தால் நாயகன் எடுத்த முடிவு என்ன?

 

நாயகனின் கோபமும் புறக்கணிப்பும் கண்டு அவள் எடுத்த முடிவு என்ன? அவளின் தவறுகளை அவன் மன்னிப்பானா?? இல்லை தண்டிப்பானா?? என்பதை இன்னும் பல கதாப்பாத்திரங்களோடு பார்க்கப் போகிறோம்.. என்னுடைய மற்ற கதைகளுக்கு தந்த ஆதரவை இந்த கதைக்கும் எதிர்பார்க்கிறேன்..

 

கதையின் நாயகன் நாயகிகள்,

மகிழ்வேந்தன் சுடரொளி

அமுதவாணன் அருள்மொழி.

 

 

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சித்ரா smile

நன்றி!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.