அறிவிப்பு - இன்று மாலை தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
புதிய எழுத்தாளர்களுக்கு எப்போதும் நேசக் கரம் நீட்டும் chillzeeயில் மீண்டும் ஒரு புதிய எழுத்தாளர் 'சசிரேகா' அறிமுகம் ஆகிறார்.
சசிரேகாவின் "ஆதிபனின் காதலி" எனும் புதிய தொடர் இன்று மாலை முதல், வாரம் தோறும் வியாழக்கிழமை மாலைகளில் உங்களை தேடி வரப் போகிறது.
chillzee வாசகர்களுக்கு ஆசிரியையின் செய்தி இதோ:
வணக்கம் என் பெயர் சசிரேகா இது என்னுடைய முதல் கதை இதுவரை நான் எந்த கதையோ கட்டுரையோ எழுதியது இல்லை இது தான் என்னுடைய முதல் முயற்சி தன்னை காதலிப்பதாக ஏமாற்றிய கதாநாயகியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் கதாநாயகன் அவளை வைத்தே பிரிந்து சென்ற தன்னுடைய குடும்பத்தை ஒன்று சேர்ப்பதே எனது கதையாகும் கதையின் பெயர் ஆதிபனின் காதலி. இதில் ஏதேனும் குறையிருந்தால் தயவுசெய்து மன்னித்து குறைகளை சுட்டிக்காட்டவும். நன்றி
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
Chillzeeக்கு உங்களை வருக என அன்புடன் வரவேற்கிறோம் சசிரேகா!
உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி!