அறிவிப்பு - 15 நவம்பர் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
Chillzeeயில் இன்னுமொரு புதுமுக எழுத்தாளர் அறிமுகம் ஆகப் போகிறார்!
நவம்பர் 15 முதல் ஒவ்வொரு புதன் மாலையிலும் தேவிஸ்ரீயின் "என் நிலவு தேவதை" உங்களை தேடி வரப் போகிறாள்.
chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ:
அனைத்து chillzee வாசகர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது பெயர் தேவிஸ்ரீ. நான் இந்த தளத்திற்க்கு புதிது. இங்கு தொடர்கதை எழுத விரும்பினேன். அப்போது யோசித்ததுதான் இந்த கதை. அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கின்றேன்.
எனது கதையின் தலைப்பு – என் நிலவு தேவதை
இந்த காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பதே காணாமல் போய்விட்டது. என்கதை கூட்டுக்குடும்பத்தின் சிறப்பையும் அதன் அவசியத்தையும் அதனோடு அழகான காதலையும் கொண்டதாக இருக்கும். ஏற்காடு பகுதியில் வாழும் மிகப்பெரிய செல்வந்தரான ஆறுமுகவேலின் குடும்பத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவரின் மகன்வழிபேத்தி அமிர்ததரங்கிணி இக்கதையின் நாயகி. அவளின் வருகையால் அக்குடும்பத்தில் நிகழும் திருப்பங்களை கொண்டு கதை ஆரம்பமாகிறது. அவளின் கடந்தகாலமும் நிகழ்காலமும் எவ்வாறு அவள் வாழ்க்கையை மாற்றியது? என்ன என்பதை கொண்டு கதை பயணிக்கின்றது. அதோடு இக்கதையின் சுட்டெரிக்கும் சூரியனான நாயகனுக்கும் குளுமையின் நிலவான நாயகிக்கும் உண்டாகும் போர் அதாவது காதல் கதையே-என் நிலவு தேவதை.
என்றும் உங்கள் ஆதரவுடன்,
தேவிஸ்ரீ.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
Chillzeeக்கு உங்களை வருக என அன்புடன் வரவேற்கிறோம் தேவிஸ்ரீ!
உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி!