அறிவிப்பு - 3 டிசம்பர் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
கவிதை, சிறுகதை பகுதியில் நமக்கு பரிச்சயமான ஆர்த்தி, தொடர்கதை பகுதியில் புதுமுகமாக அறிமுகமாக இருக்கிறார்.
ஆர்த்தியின் மறவேனா நின்னை!?!? கதை டிசம்பர் 3 முதல் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை மகிழ்ச்சியூட்ட வெளி வர இருக்கிறது.
chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ:
வணக்கம் chillzee நண்பர்களே!!!!
“மறவேனா நின்னை!?!?” எனது முதல் தொடர்கதை. சிறுகதையாக இதை எழுத ஆரம்பித்து பின் ஒரு தூண்டுதலின் மூலம் இதோ இன்று தொடர்கதையாக உங்களிடம் தருகிறேன்.
இக்கதை காதல்+ suspense எனவிருக்கும். நாயகன் தனது காதலை நாயகியிடம் தெறிவித்து விட்டு அவளின் பதிலை அறியும் முன்னரே விலகிவிடுகிறான். அவன் விலகலுக்கான காரணம் என்ன??? சில வருடங்கள் கழித்து எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் நாயகனை சந்திக்கிறாள் நாயகி. பின் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே மறவேனா நின்னை!?!?
Chillzee தளத்தில் எனக்கு எப்பொழுதும் என்னற்ற ஆதரவு கிடைத்திருக்கிறது. இப்பயணத்திலும் உங்கள் அனைவரின் ஆதரவும் கிட்டும் என நம்புகிறேன். உங்களின் கருத்துக்கள் என் எழுத்துக்களை மேம்படுத்தும்.
எனது நன்றிகள் பல chillzee team’ற்கு!!!!
நன்றி!!!
ஆர்த்தி N
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
தொடர்கதை பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் ஆர்த்தி!
உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி!