அறிவிப்பு - 14 ஜனவரி தொடங்கும் வசுமதியின் புத்தம் புதிய தொடர்!
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
'சர்வதோபத்ர... வியூகம்' எனும் வித்தியாசமான தொடரின் மூலம் நமக்கு அறிமுகமான வசுமதி, தாரிகை எனும் குடும்பம் | சமூக நலக் கதையுடன் உங்களை அடுத்த மாதம் சந்திக்க வருகிறார்.
14 ஜனவரி தொடங்க இருக்கும் இந்த தொடரின் அத்தியாயங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு அன்று பதிவு செய்யப்படும்.
chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ:
வெள்ளைத்தாளில் வரையப்பட்ட
உயிரோவியம் நான்..
மழலை மொழியில் பிதற்றிய
தங்கமகன் நான்..
மங்கையர் தோட்டத்தின்
மாயக்கண்ணனும் நான்..
மன்னவர் கூட்டத்தின்
இளவரசனும் நான்..
பகலில் நடமாடும்
நிழலாகிய ஆணும் நான்..
இரவில் இசைந்தாடும்
நிஜமாகிய பெண்ணும் நான்..
நிழல் நிஜமாகி
வெறுக்கப்பட்டவள் நான்..
வீடுமனை தேடி வீதியில்
இறங்கியவள் நான்..
முடுச்சுக்குள் முடியப்பட்டு
முறிந்துபோனவளும் நான்..
சிக்குகள் அவிழ்க்கப்படு
சிறகு விரித்தவளும் நான்..
மொத்தத்தில்,
தீக்குள் உருவெடுத்த
தாரிகை நான்..
வணக்கம் நன்பர்களே..
மேலே பதிவிடப்பட்டிருக்கும் படத்தின் மூலம் இந்தக் கதை யாரைப் பற்றியது என்பதை அறிந்திருப்பீர்கள்..
கதையின் நாயகி : தாரிகா..
கதையின் நாயகன் : இருக்கார்..
இந்த கதையின் மூலம் சமூகத்தின் பார்வையில் திருநர்கள், திருநர்கள் பார்வையில் சமூகம் எப்படி என்பதை எழுதவிருக்கிறேன் + அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் பதிவிடவிருக்கிறேன்...
இக்கதைக்கு உங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்..
முதல் அத்தியாயத்துடன் விரைவில்..
நன்றி..
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் வசுமதி
நன்றி!