(Reading time: 2 - 4 minutes)

அறிவிப்பு - 6 பிப்ரவரி தொடங்கும் சாகம்பரியின் புத்தம் புதிய தொடர்!

Yaathu varinum... evvaaraayinum...

பிரென்ட்ஸ்,

மழைமேகம் கலைந்த வானம் தொடரின் மூலம் உங்கள் அனைவருக்கும் அறிமுகமான சாகம்பரி குமார், "யாதுவரினும்… எவ்வாறாயினும்… " எனும் புதியத் தொடருடன் மீண்டும் உங்களை சந்திக்க வருகிறார்.

பிப்ரவரி 6 தொடங்கும் இந்த தொடர், வாரம்தோறும் செவ்வாய் கிழமை மாலைகளில் chillzeeயில் வலம் வர இருக்கிறது.

கதையை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:

டியர் சில்சீ ரீடர்ஸ்,

உங்களுடைய உணர்வுபூர்வமான ஆதரவுடன் உற்சாகமாக என்னுடைய முதல் தொடர்கதையை எழுதி முடித்துவிட்டேன். அதே உற்சாகத்துடன் அடுத்த தொடர்கதையை ஆரம்பிக்க உள்ளேன்.

தலைப்பு: யாதுவரினும்… எவ்வாறாயினும்…

கதையின்  ஒன் லைன்: பிரிந்திருக்கும் கணவன்-மனைவி ஒன்று சேரும் கதைதான்.

மழைமேகம் வெர்சன் 2 ஆகவும் இருக்கும். ஆனால், இது ஒன் மேன் ஷோ இல்லை.

கூட்டு குடும்பம் பற்றி அறியாதவர்கள் இங்கே அதை பற்றி தெரிந்து கொள்ளலாம். சிறியவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை தந்து அவர்கள் சிக்கலில் மாட்டும்போது தலையிட்டு தீர்வு சொல்லும் பெரியவர்களும், தங்களுக்குள்ளாகவே பாசப்பாலத்தை அமைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் இன்பத்திலும் துன்பத்திலும் உறுதுணையாக இருந்து கொண்டு பெரியவர்கள் தலையிடும் போது ஏற்றுக் கொண்டு பொறுப்புடன் செயல்படும் இளையவர்களும் இங்கு கதையை கொண்டு செல்கிறார்கள்.. காதல், மானம், வீரம் மற்றும் சுயமரியாதை பேணும் தமிழர்களின் மரபில்  ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நான்  கதை சொல்லிப் போகப்போகிறேன். என்னுடைய முதல் தொடர்கதைக்கு தந்த ஆதரவினை இந்த கதைக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன். வாருங்கள்…       

அன்புடன்

சாகம்பரி 

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்களின் புதிய தொடர்கதை வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சாகம்பரி smile

நன்றி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.