அறிவிப்பு - 23 மார்ச் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் புதிய எழுத்தாளர் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார்.
"கடவுள் போட்ட முடிச்சு" எனும் தன்னுடைய புதிய கதையுடன் நம் அனைவரையும் சந்திக்க வருகிறார் ஜெயந்தி.
மார்ச் 23ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளி மாலைகளில் பதிவாகும்.
கதையை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:
ஆதி நல்ல வசதியான குடும்பத்தைச்சேர்ந்த பையன்.ரதி அப்பர் மிடில் கிளாஸ் பெண்.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.இருவரின் பெற்றோரும் அதற்கு மதிப்பு குடுத்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள்.திருமணத்தன்று ரதி காணாமல் போவதால் அவளுடைய தங்கை நந்தினியை ஆதி திருமணம் செய்து கொள்கிறான். இருவருக்குமே அதில் விருப்பம் இல்லை.பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவும் மற்றும் குடும்ப கௌரவத்தைக் காப்பதற்காகவும் மட்டுமே திருமணம் செய்தகொள்கிறார்கள்.இதற்கிடையே ரதி கடத்தப்பட்டிருப்பது தெரிந்து அவளை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.ஆதி நந்தினியை டைவர்ஸ் செய்து விட்டு ரதியை மணக்க முடிவு செய்கிறான்.நந்தினியும் அதற்கு சம்மதிக்கிறாள்.ஆதி மனம் மாறி நந்தினியை மனைவியாக நினைத்து அவளையும் கன்வின்ஸ் செய்து குடும்பம் நடத்துவானா? இல்லை வீட்டினரை சமாதானப்படுத்தி ரதியை திருமணம் செய்து கொள்வானா? என்பதனை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
Chillzee.inற்கு உங்களை ஸ்மைலுடன் வரவேற்பதுடன், உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆகவும் வாழ்த்துக்களை பகிர்கிறோம் ஜெயந்தி
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏