அறிவிப்பு - 30 மார்ச் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் இன்னுமொரு புதிய எழுத்தாளர் அறிமுகமாக இருக்கிறார்.
"என்னவளே" எனும் தன்னுடைய புதிய கதையுடன் நம் அனைவரையும் சந்திக்க விரைவில் வருகிறார் கோமதி சிதம்பரம்.
மார்ச் 30ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளி மாலைகளில் பதிவாகும்.
கதையை பற்றி மற்றும் தன்னை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:
என் பெயர் கோமதி சிதம்பரம்.
இது எனது முதல் கதை. என்னவளே!!!!
இது ஒரு காதல் கதையாகும்.
இக்கதையை நான் தொடர்கதையை எழுத விரும்கிறேன்.
ரிஷி தனது ஆருயிர் காதலி கீதாவை 3 வருட பிரிவிற்கு பிறகு சந்திக்கிறான். கீதாவோ, ரிஷியின் அத்தை மகன் ராஜசேகரின் வாரிசு என்று ஒரு குழந்தையோடு அவன் முன்பு நிற்கின்றாள்.
இனி, ரிஷி என்ன செய்வான்? கீதாவிற்கு தனது காதலை எப்படி புரியவைப்பான்? ராஜசேகர்க்கு என்னவாயிற்று?
தனது உயிரை நினைத்து வாழும் ரிஷியின் முன்பு அந்த குழந்தையின் தாயாக கீதா எவ்வாறு இருக்க போகிறாள்?
குழந்தையின் வரவால் அந்த வீட்டில் நிகழப்போகும் மாற்றங்கள்.
என்பதை இனி வரும் தொடரில் படித்து தெரிந்து கொள்ளவும்.
என்னை கதை எழுத ஊக்குவித்த chillzeeku என் மனமார்ந்த நன்றிகள்.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
Chillzee.inற்கு உங்களை ஸ்மைலுடன் வரவேற்பதுடன், உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆகவும் வாழ்த்துக்களை பகிர்கிறோம் கோமதி
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏