அறிவிப்பு - 5 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் ஆதிபனின் காதலி தொடரின் மூலம் அறிமுகமான சசிரேகா, இன்னுமொரு புதிய கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்.
"நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய்" எனும் இந்த புதிய தொடர்கதை ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் வாரம்தோறும் வியாழன் மாலைகளில் பதிவாகும்.
கதையை பற்றி மற்றும் தன்னை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:
வணக்கம் என் பெயர் சசிரேகா இது என்னுடைய இரண்டாவது கதை. மறுபடியும் உங்களுடன் எனது புதிய கதையை பகிர்ந்து கொள்ள நான் வந்திருக்கிறேன்.
எனது இந்த கதைப்படி காதலி தன் காதலனை தேடி அவன் இருக்கும் இடத்திற்கு வேலைக்கு வருகிறாள். காதலனுக்கு தான் யாரென தெரியாமலே அவனுடைய பிசினஸில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டுபிடித்து அதை அவனை வைத்தே ஒவ்வொன்றாக தீர்க்கிறாள். பல பிரச்சனைகளுக்குப் பிறகு காதலன் தன் காதலி யாரென கண்டுபிடித்தானா அவர்கள் இருவரும் எவ்வாறு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக ”நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய்” என்ற தலைப்பில் கதையாக எழுதியுள்ளேன்.
எனது ”ஆதிபனின் காதலி” கதையைத் தொடர்ந்து இந்த கதைக்கும் ஆதரவு தருமாறு சில்சி குழுமத்திடமும் அனைத்து வாசகர்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏