அறிவிப்பு - தேவியின் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்!
ஹலோ பிரென்ட்ஸ்
வணக்கம்!
தன்னுடைய ஐந்தாவது ஹிட் கதையான விழிகளிலே காதல் விழாவை தொடர்ந்து, தேவி "காதலான நேசமோ" எனும் புதிய தொடருடன், உங்களை வரும் வியாழன் முதல் சந்திக்க வருகிறார்!!!!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் வாரம்தோறும் வியாழக்கிழமை மதியங்களில் பதிவாகும்.
கதையை பற்றி மற்றும் தன்னை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:
வணக்கம் பிரெண்ட்ஸ்..
சில்சீயில் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை விழிகளிலே காதல் விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து வாசித்தும், கருத்துக்கள் கொடுத்ததும் என்னை ஊக்கபடுத்தும் வாசகர்கள், சக எழுத்தாளர்கள் மற்றும் சில்சீ டீம் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் ..
இதோ ஆறாவது தொடர்கதையான “காதலான நேசமோ” இனி வாராவாரம் வியாழன் அன்று உங்களை வந்தடையும். தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
“காதலான நேசமோ” பற்றி சில வரிகள்
என்னுடைய முதல் கதையான காதல் உறவேயின் ராம், மைதிலி அனைவருக்கும் நினைவு இருக்கும். அவர்களின் வாரிசான ஷ்யாமின் காதல் கதையே இந்த காதலான நேசமோ... நேசத்திற்கும் காதலுக்கும் இடையே உள்ள இடைவெளியும், அந்த நேசம் காதலாக மாறும் விந்தையுமே இந்த கதை.. படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே..
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்களின் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவி
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏