அறிவிப்பு - 24 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் சாகம்பரி மூன்றாவது தொடர்கதை எழுத இருக்கிறார்.
"மோனத்திருக்கும் மூங்கில் வனம்" எனும் இந்த கதை, ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
டியர் ரீடர்ஸ்,
இது சில்சீயில் நான் எழுதப் போகும் மூன்றாவது தொடர் கதை. உங்களுடைய உங்களுடைய பாராட்டுகள் தந்த சக்திதான் இந்த கதையை எழுத வைக்கிறது. கதை எப்போதும்போல் குடும்பம் ப்ளஸ் காதல் கதைதான்.
ஒவ்வொரு வனத்திற்கும் தனிப்பட்ட ஓசை உண்டு. அது அங்கு வாழும் உயிரிகளினால் எழுப்பப்படுவது. சதுப்பு நிலக் காடுகளில் மரங்களின் மீது அலைகளின் மோதும் ஓசை… ஊசியிலைக் காடுகளில் சருகுகள் மீது காற்றி வீசி எழுப்பும் ஓசை என்று கேட்டிருப்பீர்கள்தானே…
மூங்கில் வனத்திற்கு என்ன சிறப்பு….? ஓசைக்கும் இசைக்கும் உள்ள வேற்றுமைதான். இங்கு உள்ள பச்சை மூங்கில்களில் வண்டுகள் குடைந்து இயற்கையாகவே பல புல்லாங்குழல்கள் உருவாகியிருக்கும். அங்கு காற்று அந்த துளைகளில் புகுந்து வெளிவரும்போது இனிய இசை வெளிப்படும்… வேணுகானம்!. சங்கின் ஓம்காரமும் வண்டுகளின் ரீங்காரமும் மூங்கிலின் குழலொலியும் ஆதியின் இயற்கை இசை என்று சொல்வதுண்டு. அதிலிருந்துதான் சப்தஸ்வரங்களும் ராகங்களும் உருவாகின.
என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மனமும் ஒரு வனம்தான். அதற்கென்று இசையை உருவாக்கி துடிக்கும்…. அது மௌனமாகி விட்டால்… உயிர்தான் இருக்கும் உயிர்ப்பு இருக்காது… இசையை மறந்து மௌனித்த இதயம் மீண்டும் இசைக்குமா?
இதுதான் ஸ்டோரி லைனும்கூட…
பயப்படாதீங்க இது இசை தொடர்புடைய கதையில்லை…
உங்களின் மேலான ஆதரவுகளுடன்
அன்புடன்
சாகம்பரி
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சாகம்பரி
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏