அறிவிப்பு - 2 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் சிறுகதைகள் எழுதி இருக்கும் பத்மினி முதல் முதலாக தொடர்கதை எழுத இருக்கிறார்.
"என் மடியில் பூத்த மலரே" எனும் இந்த கதை, மே 2 ஆம் தேதி முதல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை புதன் கிழமை மதிய நேரத்தில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
நாயகன் ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். அவனுடைய திருமண வாழ்க்கை தோழ்வியில் முடிந்ததால், பெண்கள் மீது வெறுப்பாக இருப்பவன். எவ்வளவு தான் அவன் அம்மா வற்புறுத்தியும் மற்றொரு திருமணத்தை மறுத்து வருபவன்.
நாயகி பாரதி, கிராமத்து பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாகிரது. அதற்காக, ஆதித்யாவின் அம்மா திட்டப்படி , அவன் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள்..
ஆரம்பத்தில் ஆதித்யா பாரதியை வெறுத்தாலும், அவனுடைய குழந்தையின் வளர்ச்சியை பாரதியின் வயிற்றில் காணும் பொழுது, அவன் மனம் தானாக பாரதியின் பக்கம் சாய்கிறது.
அதுவே காதலாக மாறுமா?
பாரதிக்கும் அவன் மீது அன்பு தோன்றுமா?
இருவரும் இணைவார்களா??
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் பத்மினி
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏