அறிவிப்பு - 12 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
தன்னுடைய நான்காவது தொடர் இன்பமே வாழ்வாகிட வந்தவனே நிறைவுப் பெற்ற கையோடு, புதிய நேரத்தில், புதிய தொடருடன் உங்களை சந்திக்க வருகிறார் ஸ்ரீ!!! 👍👍👍
"அன்பின் அழகே" எனும் இந்த புதிய கதை, மே 12 ஆம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமை காலை நேரத்தில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
வணக்கம் ப்ரெண்ட்ஸ்,
சில்சியில் என்னுடைய ஐந்தாவது கதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
அன்பின் அழகே
நம் அன்பான அபினவின் அழகி திஷானி இவங்க வாழ்க்கையை தான் நாம பார்க்க போறோம்.நாயகியை பிடித்து போய் திருமணத்திற்கு சம்மதிக்கும் நாயகன்,பல குழப்பங்களுக்கு நடுவில் நாயகனை மணக்க சமதிக்கும் நம்ம நாயகி.திருமணத்திற்கு பிறகான அவர்களின் காதலும் புரிதலுமே கதை.(படத்தை பார்த்து கதையை ஓரளவு ஊகித்தவர்களுக்கு ஒரு சபாஷ் போட்டுவிடுகிறேன்.. ;) )
என் ஒவ்வொரு கதையிலும் என்னால் முடிந்த வித்யாசத்தை புகுத்தியிருக்கிறேன்.அதே வரிசையில் இதுவும் ஒரு வித்யாசமான முயற்சி தான்.நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் கூடிய விரைவில் முதல் அத்தியாயத்தோடு வருகிறேன் மக்களே..
ஆதரவெல்லாம் கொடுங்கனு கேக்க மாட்டேன் கொடுத்தே ஆகணும்..
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஸ்ரீ
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏