அறிவிப்பு - 4 ஜூலை தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzeeல் இன்னுமொரு புது எழுத்தாளர் 'அஸ்ரிதா ஸ்ரீ' அறிமுகமாக இருக்கிறார்!!! 👍👍👍
"பார்த்த முதல் நாளே" எனும் இந்த புதிய கதை, ஜூலை 4 ஆம் தேதி முதல் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை (fortnightly) புதன்கிழமை மதிய நேரத்தில் பதிவாகும்.
கதையை பற்றிய கதாசிரியையின் முன்னுரை இதோ:
கல்யாண வாழ்க்கை என்பது ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோர்கள் ஆகும் போது நிறைவடைறது இல்ல .
தோண்ட தோண்ட வற்றாமல் வருகிற ஊத்து தண்ணி மாதிரி அவங்களுக்குள்ள காதல் வற்றாத ஜீவ நதியா இருக்கனும் . அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் மாதிரி அன்பும் அந்நியோன்னியமும் இருந்துகிட்டே இருக்கனும். எண்ண எண்ண திரும்ப முளைக்குற நட்சத்திரம் மாதிரி சந்தோஷம் முளைச்சுக்கிட்டே இருக்கனும் .பிரச்சனைகள் வரும் போது உனக்கு நானும் எனக்கு நீயும் கூடவே இருப்போம்னு நம்பிக்கை வேணும் .அவ்ளோ ஏன் கணவனோட கடைக்கண் பார்வையும் மனைவியோட சின்ன சிரிப்பும் எல்லாத்தையும் சுகமாக்கிடனும் .
நம்ம கதையில கூட ரெண்டு பேரு இருக்காங்க . அவங்க யாரு? அவங்களுக்குள்ள காதல் எப்படி வருது? கல்யாண வாழ்கையை எப்படி வாழறாங்க? பிரச்னைகள் வரும் போது எப்படி சமாளிக்குறாங்க ? இப்படி நிறைய கேள்விகள் இருக்கா? அதுக்கு பதிலும் இருக்கு கதைக்குள்ளயே.கொஞ்ச நாள் அவங்க கூட சேர்ந்து நம்மளும் அவங்க வாழ்க்கை பயணத்துல பங்கு எடுத்துப்போம்.அவங்கள பாக்குற முதல் நாள் உங்களுக்கும் மறக்க முடியாத சுவையானதா இருக்கும்னு நம்பறேன்.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் அஸ்ரிதா 🙂
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏