அறிவிப்பு - தமிழ் தென்றலின் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
"என் சிப்பிக்குள் நீ முத்து" தொடரின் மூலம் Chillzee வாசகர்களுக்கு நாவலாசிரியராக அறிமுகமான தமிழ் தென்றல் தன்னுடைய இரண்டாவது கதை "மிசரக சங்கினி" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.
புதிய கதை பற்றிய தமிழ் தென்றலின் அறிமுகம் இதோ:
ஹாலிவுட்டில் அதிகமாகவும் பாலிவுட்டில் ஓரிரு சூப்பர் ஹீரோக்களையும் பார்த்திருக்கும் நமக்கு நிஜத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கிடைச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா? நான் யோசிச்சிருக்க! நினைக்கும் போதெல்லாம் ஒரு கிரேட் எக்ஸைட்மெண்ட். ஆனா நிஜத்துல ஒரு சூப்பர் ஹீரோவை ரெடி செய்ய நான் கடவுள் இல்லையே. அதான் ஒரு கதை எழுதலாம்னு முடிவெடுத்துட்ட.
வாவ்...சூப்பர் ஹீரோ! அப்படினு தோனும் போதே அதான் நிறைய படத்துல பார்த்துட்டமேனு ஒரு தாட் கூட வரலாம். சூப்பர் ஹீரோவை, ஹீரோவாகவும் அவருக்கு கிடைச்சிருக்கும் பவர் வச்சு என்ன சாகசங்கள் செய்றாருனு மட்டுமே பார்த்த நமக்கு, பவரால பிரச்சனை ஏதும் வருமான தோனியிருக்கா? மூனாவது மனுஷனாலோ இல்லை வில்லனாலோ வர பிரச்சனை இல்லைங்க. ஒரு சாதாரண மனுஷன் அசாத்தியமான சக்தியை அடையும் போது அவனுடைய இயல்புகள் என்னாகின்றன? உறவுகளின் நிலை என்ன? தன்னுடைய சுகங்களை இழக்கிறானா? தன்னுடைய சுகங்களை இழந்துதான் மற்றவருக்கு சேவை செய்ய முடியும்னு நிலையிருந்தா நம்மில் எத்தனை பேர் முன்வந்து இந்த சக்தியை பெறுவோம்? அசாத்திய சக்தியை அடையும் போது வரும் பின்விளைவுகளும் ஆபத்துகளும் என்னன்னுதா நாம பார்க்க போறோம்.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் தமிழ் தென்றல் 🙂
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏