அறிவிப்பு - மதுவின் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
"மார்பில் ஊறும் உயிரே", "துடிக்கும் இதயம் உனதே உனது", "முடிவிலியின் முடிவினிலே" புகழ் மது, தன்னுடைய நான்காவது தொடர்கதை "செந்தமிழ் தேன்மொழியாள்" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.
புதிய கதை பற்றிய மதுவின் அறிமுகம் இதோ:
சில்சீயில் எனது நான்காவது தொடர்கதை “செந்தமிழ் தேன்மொழியாள்” கதையைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை இதோ...
“ஊர்வன, பறப்பன, நடப்பன என எண்ணற்ற பிராணிகளும், பட்சிகளும் மனிதர்களும் இந்த உலகத்தில் வசிக்கிறோம். ஆனால் இதே பூமியில் இன்னொரு மிகப் பெரிய உலகம் ஒன்று உண்டு. நாம் வாழும் உலகத்தைத் தாங்கி நிற்பதே அவ்வுலகம் தான் என்று அறிவோமா.
அந்த உலகம் தான் சிருஷ்டியின் கருவறை.
பூமியின் மூன்றில் இரண்டு பங்கு முழுவதும் வியாபித்திருக்கும் உலகம்.
அது என்ன உலகம் என்று இப்போது யூகித்து இருப்பீர்கள் தானே!
ஆம். பரந்து விரிந்த சமுத்திர உலகம் தான் அது.
அந்த உலகத்தினுள் ஓர் பயணம் சென்று வருவோமா! செந்தமிழ் தேன்மொழியாளோடு”.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் மது 🙂
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏