(Reading time: 3 - 5 minutes)

அறிவிப்பு - 4 செப்டம்பர் தொடங்கும் சாகம்பரியின் புத்தம் புதிய தொடர்!

Midimaiyum achamum meviya nencham

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

"மழைமேகம் கலைந்த வானம்", "யாது வரினும்... எவ்வாறாயினும்...", "மோனத்திருக்கும் மூங்கில் வனம்" புகழ் சாகம்பரி தன்னுடைய நான்காவது தொடர்கதை "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

இந்த கதை, செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவாகும்.

தையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்

அட, இது பாரதியின் பாடல் வரிகள். மிடி என்ற வார்த்தையை ‘தன்னை காமுறுவார் மிடி தீர்க்கின்ற தங்கம்’ என்று முருகக்கடவுளை போற்றும் தங்க ஆனந்த களிப்பிலும் படித்திருக்கிறேன். அப்படியென்றால்… மிடி என்றால் குறை…  மேவிய நெஞ்சம் என்றும் உள்ளதே… ஸோ… மனதில் பரவியிருக்கும் குறை…   நாம் செய்த தவறை நாமே உணரும்போது வரும் குற்ற உணர்வைவிட மோசமான மனக்குறை வேறு எதுவும் இருக்கிறதா என்ன? அதுதான் கில்டி உணர்வையும் தரும்.

அப்புறம் இந்த கதைக்கான போஸ்டர்…! ஆங்… அந்த பெண்ணை எனக்குத் தெரியும்… சதாக்ஷி…  அழகான பெண். ஜெக்கிங் அணிந்து காட்டன் டாப்ஸ் போட்டு சிரித்த முகத்துடன் துள்ளு நடையில்  நடக்கும்போது அவளை சுற்றி இருக்கும் உலகத்தை கூல் செய்வாளே!. இப்போது ஏன் இப்படி இருளில்….  காய்ந்து போன மரங்களுக்கிடையில் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள்… அந்த மரங்கள் பட்டுபோனவையா… அல்லது இலையுதிர்த்து நிற்கின்றனவா? அவளும் அதுபோன்றுதான் இருக்கிறாளோ?

ம்… அந்த பையன் யார்னு எனக்குத் தெரியவில்லை! அவன் ஏன் வானத்தை பார்த்துக் கொண்டு நிற்கிறான்? எப்போது இளவேனில் காலம் வரும் என்று சூரியனை கேட்கிறானோ? ஒருவேளை இப்போது இலையுதிர்த்து நிற்கும் மரங்கள் அந்த வசந்த காலத்தில் புது தளிர் விட்டு பூத்து குலுங்குமோ? அல்லது பட்ட மரத்தினை துளிர்க்க செய்யும் மழைமேகத்தின் வரவை எதிர் நோக்குகிறானா?

ஐம் வொண்டரிங்… அவன் சூரியனை கட்டி இழுத்து விரைவில் வசந்தத்தை கொண்டு வரப்போகிறானா அல்லது மழையை வரவழைத்து பட்டுபோன மரங்களை துளிர்க்க வைக்கும் மாயத்தை செய்யப் போகிறானா?

டியர் ரீடர்ஸ்! இந்த தொடரின் மூலம் செப்டம்பர் 4ம் தேதி முதல்  நாம் மீண்டும் சந்திக்கலாம்! என்னுடைய மற்ற தொடர்களுக்கு தந்த ஆதரவையும் கருத்து பகிர்தலையும் இந்த தொடருக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி!. இதற்கான களம் தரும் சில்சீ டீமிற்கும் மிக்க நன்றி!

அன்புடன்

சாகம்பரி

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்! 

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சாகம்பரி 🙂

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.