அறிவிப்பு - 17 செப்டம்பர் தொடங்கும் ராசுவின் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee வாசகர்களின் மனம் கவர்ந்த ராசு தன்னுடைய ஒன்பதாவது தொடர்கதை "நீயிருந்தால் நானிருப்பேன்" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.
இந்த கதை, செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
அனைவருக்கும் வணக்கம்.
மீண்டும் உங்களை சந்திக்கப் போவதில் மகிழ்ச்சி.
ஒரு தோழி தன் வாழ்க்கையில் சந்தித்த மாபெரும் இழப்பை அறிந்த நான் இந்தக் கதையை எழுதுவதற்கு ஆசைப்பட்டேன். அந்தத் தோழியின் துணிச்சலுடன் கதாநாயகியை வலம் வர விடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். எப்போதும் என் கதையைப் படிப்பவர்கள் 'ரொமான்ஸ்' கொஞ்சம் இருந்திருக்கலாம் என்று சொல்வதுதான் அதிகம். இந்தக் கதையில் தர முயற்சி செய்கிறேன். வரவில்லை என்றாலும் என்னை பெரிய மனது பண்ணி விட்டுவிடுங்கள். இதற்கும் உங்களது அன்பும், ஆதவும் தொடரும் என்று நம்புகிறேன்.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ராசு 🙂
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏