அறிவிப்பு - 5 நவம்பர் தொடங்கும் சசிரேகாவின் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee வாசகர்களின் மனம் கவர்ந்த சசிரேகா தன்னுடைய புதிய தொடர்கதை "என் வாழ்வே உன்னோடுதான்" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.
இந்த கதை 5 நவம்பர் முதல் வாரம்தோறும் திங்கள் காலைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
யாரோ செய்த திருட்டு குற்றம் கதாநாயகன் மீது பழிவிழுந்து தண்டனையாக தன் சொந்த வீட்டிற்கே வேலைக்காரனாக மாறுகிறான். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் கதாநாயகியை திருமணம் செய்து கொள்கிறான். திருட்டு பழியிலிருந்து தன் கணவனை மீட்க பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு எப்படி கதாநாயகனை காப்பாற்றுகிறாள் கதாநாயகி என்பதும் கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள 7 பிரச்சனைகளை எப்படி கதாநாயகன் தீர்த்து வைக்கிறான் என்பதும் இறுதியில் பல போராட்டங்களுக்கு பிறகு என் வாழ்வே உன்னோடுதான் என இருவரும் இணைந்து ஒன்று சேர்வதே இக்கதையாகும். இக்கதைக்கு வாசகர்களான தாங்கள் அனைவரும் ஆதரவு அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏