(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - 22 டிசம்பர் தொடங்கும் ஸ்ரீயின் புத்தம் புதிய தொடர்!

Unnaale naan vazhgiren

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

இனிமை + எளிமை + அருமை என தன் இனிய எளிய நடையால் நம் மனம் கவர்ந்த ஸ்ரீதன்னுடைய ஏழாவது தொடர்கதை “உன்னாலே நான் வாழ்கிறேன்” உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

இந்த கதை, டிசம்பர் 22 ஆம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பதிவாகும்.

தையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

ஹாய் மக்களே,

சில்சீயில் என்னுடைய ஏழாவது கதை உன்னாலே நான் வாழ்கிறேன் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீகாந்த் மதுமிதா திருமண பந்தத்தில் இணையும் இவர்களின் அன்றாட எதார்த்த நிகழ்வுகளையே பார்க்க போகிறோம்.

ஸ்ரீகாந்த் – இதுவரை இருந்த ஸ்ரீயின் கதை நாயகர்கள் போன்றவன் கிடையாது. மனதில் அளவுக்கதிகமான காதலும் அன்பும் இருந்தாலும் அதை பல நேரங்களில் சரியாய் வெளிப்படுத்த தெரியாத சாதாரண குடும்பத் தலைவன்.

மதுமிதா -- நடைமுறை வாழ்க்கையில் இன்றைய சூழலில் நீங்கள் யாராக வேண்டுமானாலும் மதுமிதாவாக இருக்கலாம்.

இவர்களின் வாழ்க்கையின் பல சம்பவங்கள் நம்மில் பல குடும்பத் தலைவிகள் அனுபவித்திருக்கலாம்.மொத்தத்தில் கற்பனையை தாண்டிய எதார்த்தத்தையும் அதை மனக் குழப்பமின்றி கையாளுவதற்கான சில வழிகளையும் இதில் காண்போம். 6-7 அத்தியாயங்களில் முடிக்கும் அளவிற்கான குறுநாவலாய் கொடுப்பதற்கே எண்ணியிருக்கிறேன்.விரைவில் முதல் அத்தியாயத்தோடு அனைவரையும் சந்திக்கிறேன்.

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஸ்ரீ 🙂

 

chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!  

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

{kunena_discuss:656}   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.