அறிவிப்பு - விரைவில் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
சாகம்பரியின் ஐந்தாவது தொடர்கதை "யானும் நீயும் எவ்வழி அறிதும்" வரும் மார்ச் 5 ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
இதுதான் கதையின் தலைப்பு. அப்படியென்றால்… நானும் நீயும் எந்த வழியாக ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்?... அதாவது இந்த காதல்தானே நம்மை இணைத்து வைத்தது. இருவருக்கிடையே அறிமுகம் ஏற்படவும்…அன்பு ஏற்படவும்… உறவு ஏற்படவும் ஏதாவது ஒரு ஆரம்பம் வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் எது?
- சில சமயம் உறவின் முறையில் இருக்கலாம்…
- சில சமயம் நட்பின் அடிப்படையில் இருக்கலாம்..
அவர்கள் இருப்பிடத்தை பொறுத்தவரை அண்டைவீடு இருக்கலாம்.... அடுத்த தெருவாக இருக்கலாம்… பக்கத்து ஊராக இருக்கலாம்… அண்டை மாநிலமாக இருக்கலாம், அட, அடுத்த தேசமாகக் கூட இருக்கட்டுமே. ஆனால் அடுத்த உலகமாக இருந்தால்…
அச்சோ… உள்ளூர் காதல் கலவரத்தையே சமாளிக்க முடியவில்லை… இதில் இவர்களை எப்படி சமாளிப்பது?
ம்… புரிந்திருக்குமே? ஆமாம் இரண்டு வெவ்வேறு உலகங்களை சார்ந்தவர்கள் இணையும் கதைதான்…
பட்… ட்ரஸ்ட் மீ! மாறுபட்ட உலகின் வேறுபட்ட எதிக்ஸ்…. எண்ணங்கள்… அறிவியல் சிக்கல்கள்… வேற்றினத்தின் மீதான் வெறுப்பு… இத்தனையும் தாண்டி எப்பவும் நம்ம ஓட்டு காதலின் வெற்றிக்குத்தான்!
அப்படியே ஸ்டிஃபன் ஹாக்கின்ஸின் நிருபிக்கப்பட்ட… நிருபிக்கப்படாத.. தியேரிகளை உதவி கொண்டு ட்ராவல் செய்யலாமா?.
அட்மின்… இந்த ஸ்க்ரோல் ஓகேயா?.
“சாகம்பரி குமார் எழுதிய யானும் நீயும் எவ்வழி அறிதும்’ அறிவியல் ஆச்சரியங்கள் கலந்த காதல் கதை…”
அவ்வ்… ரொம்ப தைரியமாக ஆரம்பிக்கப் போகிறேன். விஷூவலாக பார்க்க வேண்டிய கதை… என்னுடைய ட்ராமாடிக் ஸ்டைல் ரைட்டிங்கை நம்பி எழுதுகிறேன்… தொடர்ந்து வாருங்கள்! வழக்கமாக என் கதைகளுக்கு தந்த ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!.
அன்புடன் சாகம்பரி
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சாகம்பரி 🙂
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏