அறிவிப்பு - விரைவில் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
தன்னுடைய இனிய எளிய கதை நடையால் நம் மனம் கவர்ந்த ஸ்ரீ, தன்னுடைய ஒன்பதாவது தொடர்கதை “உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்” உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.
இந்த கதை, மார்ச் 17 ஆம் தேதி முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவாகும்.
கதையைப் பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
வணக்கம் மக்களே,
என்னுடைய அத்தனை கதைகளுக்கும் நீங்க கொடுத்துட்டு வர ஆதரவுக்கு மிகப் பெரிய நன்றி.உங்களின் ஊக்கத்தில் எழுந்த ஆவலோடு அடுத்த கதையை கொண்டு வந்துருக்கேன்.
இதுல ஹீரோ ஹீரோயின் இதெல்லாம் தாண்டி மூணு ப்ரெண்ட்ஸ்.அவங்களை சுத்தி தான் கதை.பொதுவா நட்புனு சொன்னாலே பள்ளி அல்லது கல்லூரிகாலம் தான்.ஆனா அதை கடந்த வயதில் ஏற்படும் நட்புகளும் பல நேரத்துல வாழ்க்கைல முக்கியமான இடத்தை பிடிக்குறதுக்கான வாய்ப்புகள் இருக்கு.
உதாரணமா எனக்கே அந்த அனுபவங்கள் இருக்கு இந்த எழுத்தின் மூலமா எனக்கு கிடைத்த நட்புகளின் பட்டியல் ரொம்பவே நீளம்.
எந்த வயதிலும் நட்புக்கு எந்த வித்தியாசமும் கிடையாது இதுதான் இந்த உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்.
நட்புனு சொன்னாலே நினைச்ச அப்போ எல்லாம் பேசுறது மொக்கை போடுறது மீட் பண்றது இதெல்லாம் தான்.ஆனா நமக்கான குடும்பம் குழந்தை கடமைனு வந்த பிறகு கிடைச்ச நேரத்துல பேசி எப்பவோ ஒரு தடவை பார்த்துக்க முடியுற நட்புகள் தான் எதார்த்தம்.
ஆனா எந்த இடத்தில் விட்டோமோ பல மாதங்கள் கடந்தும் அதே இடத்தில் தொடங்குற பக்குவமான நட்பா இருக்கும்.இதை நிறைய கலாட்டா காமெடியோட முடிஞ்ச இடத்துல சின்ன சின்ன அறிவுரைகளோட சொல்லப் போறேன்.
காமெடியா ட்ரைப் பண்றேன் அது காமெடியா ஆகுதா மொக்கை ஆகுதானு நீங்கதான் சொல்ல போறீங்க..விரைவில் முதல் அத்தியாயத்தோடு ஓடி வரேன். 😊😊
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஸ்ரீ 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
{kunena_discuss:656}