அறிவிப்பு - விரைவில் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
சிறுகதை பகுதியில் இருந்து தொடர்கதை பகுதிக்கு புதுமுக எழுத்தாளர் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார்.
நம் Chillzee கதை பகுதியில் பல சிறுகதைகள் பகிர்ந்திருக்கும் பூர்ணிமா செண்பகமூர்த்தி 'இதோ ஒரு காதல் கதை' எனும் தொடருடன் உங்களை மார்ச் 15ஆம் தேதி முதல் சந்திக்க வருகிறார்.
கதையைப் பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
ஹாய் பிரெண்ட்ஸ்,
சில்சீயில் எனது சிறுகதைகளுக்கு நீங்கள் அளித்து வந்த ஊக்கத்தின் விளைவு இந்த தொடர்கதை எழுதும் ஆசை. எல்லாரின் வாழ்விலும் மறக்க இயலாத நினைவுகளைப் பதித்துச் செல்லும் கல்லூரி நாட்களின் கதை இது. இரண்டு மனங்களின் போராட்டமும், அந்த போராட்டத்தின் விளைவுகளும், ஒரு வாசகனின் பார்வையாகச் செல்லும் கதை. எனது முதல் தொடர்கதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்.
கதையின் முன்னுரை:
வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம். படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை”
உங்கள் முதல் தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் பூர்ணிமா 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
{kunena_discuss:656}