அறிவிப்பு - சகியின் அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்!
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
chillzee வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான சகி, 'உயிரில் கலந்த உறவே' எனும் புதிய தொடருடன், உங்களை மீண்டும் சந்திக்க வருகிறார்!!!!
கதையை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!!மீண்டும் புத்தம் புதிய கதை என்ற பெயரில் உங்களைத் துன்புறுத்த என் கற்பனைக்கு வடிவமளித்து உங்கள் சகி ஒரு படைப்பை அளிக்க இருக்கிறாள்.
சக்ரவியூகம் படைப்பினைக் குறித்து பல நேர்மறையான கருத்துக்கள் வந்த போதிலும்,அக்கதை ஒரு வித பரபரப்புடன் சென்றதாகவும்,அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தியதாகவும் சில கருத்துகளை நண்பர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.அதில் பொதுவான கருத்தாக இருந்ததெல்லாம் என்னுயிரே உனக்காக கதையின் மூல மாந்தர்களை ஒத்த காதல் வேறு எக்கதையிலும் இல்லை என்பதே!!காதலின் சுவை எவ்விடத்தில் குறைந்திருந்தாலும் அதற்குரிய மன்னிப்பை வேண்டுகிறேன்.எனவே,அக்குறையை பூர்த்தி செய்ய இக்கதையை அளிக்க முயல்கிறேன்.
இப்படைப்பிற்கு அளித்த தலைப்பு,"உயிரில் கலந்த உறவே!". நமது வலைத்தளத்தில் முன்னரே இதே தலைப்பில் ஒரு சிறுகதை அமைய பெற்றிருந்ததால்,இத்தலைப்பை என் கதைக்கு நான் சூட்ட சிறுகதையின் உரிமையாளரை அணுக வேண்டி இருந்தது.சிரமம் பாராமல் பெரும் மனதுடன் தனது தலைப்பை தானமாக எனக்கு நல்கிய எழுத்தாளர்.வளர்மதிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!
மேலும்,நம் வலைத்தளத்தில் எண்ணற்ற கதைகள் நான் படித்த சமயத்திலும்,எண்ணற்ற மாந்தர்கள் எனை ஈர்த்த சமயத்திலும்,என் மனதில் உறுத்திய,உறுத்திக் கொண்டிருக்கும் ஒரே இணை என் நண்பனின் படைப்பான,"சிவன்யா!"என்ற கதையின் இடம்பெற்ற அசோக் குமார்-சிவன்யா இணை தான்!! அவர்கள் இருவரின் பிரிவு ஆற்றமையாலும்,எனது தனிப்பட்ட விருப்பத்தினாலும் அன்பு மித்திரனிடம் வேண்டி எனது கதைக்களத்தின் மூல மாந்தர்களுக்கு குறித்த அவ்விரு பெயர்களையே சூட்டியுள்ளேன்.இதில் இயன்ற அளவு அன்பின் சுவையை உணர்த்த முயல்கிறேன்!
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
அன்புடன் உங்கள் சகி!!!
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி
நன்றி!