(Reading time: 2 - 4 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - உங்களுக்காக...

சில காயங்கள் " மருந்தால் " சரியாகும்.

சில காயங்கள் " மறந்தால் " சரியாகும்.

 

" ஆடம்பரம் " அழிவைத்தரும். " ஆரோக்கியம் " நல்வாழ்க்கை தரும்.

 

மனிதனுக்கு " பிரச்சனை " அதனால்,

கடவுளுக்கு " அர்ச்சனை ".

 

" வறுமை " வந்தால் வாடக்கூடாது.

" வசதி " வந்தால் ஆடக்கூடாது.

 

" வீரன் " சாவதே இல்லை.

" கோழை " வாழ்வதே இல்லை.

 

தவறான பாதையில் " வேகமாக " செல்வதைவிட.

சரியான பாதையில் " மெதுவாக " செல்லுங்கள்.

 

நீ " ரசிக்க " என்னிடம் அழகு இல்லை. ஆனால்,

நீ " வசிக்க " என் இதயத்தில் இடம் இருக்கிறது.

 

மனிதனுக்கு ABCD " தெரியும் " ஆனா "Q" ல போகத் "தெரியாது".

எறும்புகளுக்கு ABCD " தெரியாது " ஆனா "Q" ல போகத் "தெரியும்".

 

ஆயிரம் பேரைக்கூட " எதிர்த்து " நில்.

ஒருவரையும் " எதிர்பார்த்து " நிற்காதே.

 

தேவைக்காக கடன் " வாங்கு ".

கிடைக்கிறதே என்பதற்காக " வாங்காதே ".

 

உண்மை எப்போதும் " சுருக்கமாக " பேசப்படுகிறது.

பொய் எப்போதும் " விரிவாக " பேசப்படுகிறது.

 

" கருப்பு " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.

" சிவப்பு " மனிதனின் நிழலும் கருப்புதான்.

 

" வண்ணங்களில் " இல்லை வாழ்க்கை.

மனித " எண்ணங்களில் " உள்ளது வாழ்க்கை.

 

நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறது " ஆசை ". ஆனால்,

அதுக்கு பிறகும் சந்தோஷமா இருக்கனும்னு நெனைச்சா அது " பேராசை ".

 

" கடினமாய் " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

" கவனமாய் " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

 

வியர்வை துளிகள் " உப்பாக " இருக்கலாம். ஆனால்,

அவை வாழ்க்கையை " இனிப்பாக " மாற்றும்.

 

" கடனாக " இருந்தாலும்சரி,

" அன்பாக " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

 

" செலவு " போக மீதியை சேமிக்காதே.

" சேமிப்பு " போக மீதியை செலவுசெய்.

 

 "வெற்றி - தோல்வி"

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " வெற்றி " பெற்றால் சிலை, " தோல்வி " அடைந்தால் சிற்பி.

 

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " முட்டாள் " என்று தெரியும்.

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு

" புத்திசாலி " என்பது புரியும்.

 

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " போற்றும் ".

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி

" தூற்றும்

 

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " பொய் ".

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " உண்மை ".

 

" பாதி " கவலைகள் கற்பனையானவை.

" மீதி " தற்காலிகமானவை.

 

குறைகளை " தன்னிடம் " தேடுபவன் தெளிவடைகிறான்.

குறைகளை " பிறரிடம் " தேடுபவன் களங்கப்படுகிறான்.

 

விழுதல் என்பது " வேதனை ".

விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " ~சாதனை~ ".

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.