செடி வளர்ப்பதில் புதியவரா, புதினா செடியுடன் தொடங்குங்கள்
புதிதாக தோட்டம் அமைக்கும் ஆசை கொண்டிருப்பவர்களுக்கு புதினா ‘பிகினர்’ செடி போன்றது.
புதினாவை வளர்ப்பது மிகவும் எளிது. இதை வளர்க்க விதையோ, கடையில் இருந்து வாங்கும் தையோ தேவை இல்லை. சமைக்கும் போது பயன்படுத்தும் புதினா தண்டுகளில் இருந்தே எளிதாக புதினா செடியை வளர்க்க முடியும்.
புதினா தண்டில் இலைகள் இருக்கும் ஏதாவது ஒரு முனைக்கு கீழே வெட்டுங்கள்). மேலே இருக்கும் இலைகளைத் தவிர அனைத்து இலைகளையும் அகற்றி விடுங்கள்.
தொட்டியில் இருக்கும் மணலை ஈரமாக்கி புதினா தண்டுகளை நட்டு வையுங்கள். சூரிய ஒளி படாமல் ஒரு வாரம் வைத்திருங்கள். புதினா வேரூன்றியப் பிறகு வேறு இடத்துக்கு மாற்றி விடுங்கள்.
ஒருவேளை தொட்டியை மாற்றி வைப்பது கடினம் என்றால், தொட்டிக்கு மாறாக, ஒரு இன்ச் தண்ணீர் இருக்கும் கண்ணாடி பாத்திரத்தில் இலைகள் நீக்கிய புதினா தண்டுகளை போட்டு வையுங்கள். நேரடி சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினம் தினம் தண்ணீரை மாற்றுங்கள். ஒரு வாரத்தில் வேர் வர தொடங்கும். அப்போது உங்களுக்கு பிடித்த இடத்தில இருக்கும் தொட்டியில் புதினாவை நட்டு வையுங்கள்.
புதினாவை நேராக தரையிலும் நட்டு வைக்கலாம். ஆனால் அது வேகமாக வளரக் கூடியது எனவே அதை தொட்டியில் வளர்ப்பது நல்லது.