(Reading time: 3 - 5 minutes)

Top 100 songs of 2016 - #03 - பறக்கும் ராசாளியே ராசாளியே - அச்சம் என்பது மடமையடா - பாடல் வரிகள்

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..

Movie - Achcham enbathu madamaiyadaa

Music - A. R. Rahman

Lyrics - Thamarai

Singers - Sathyaprakash, Shashaa Tirupati

Actors - Silambarasan, Manjima Mohan

Released in 2016

Achcham_Yenbadhu_Madamaiyada
 

Watch it in You Tube:

 

Lyrics:

பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு!
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு!
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்..
கிழக்கெல்லாம் மேற்கு ஆகிட ... கண்டேனே..

பறவை போல் ஆகினேன் போல்ஆகினேன் இன்று..
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று..

ராசாளி..... பந்தயமா?
நீ முந்தியா? நான் முந்தியா? பார்ப்போம்.. பார்ப்போம்..

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை?
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை?

மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல...
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
குளிர் காய்கின்ற தீ

எட்டு திசை முட்டும் எனை பகலினில்,
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்,
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்.. மடிவேனோ?
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்,
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்,
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ?
எட்டு திசை முட்டும் எனை பகலினில்,
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்,
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்.. மடிவேனோ?
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்,
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்,
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ?
ராசாளி..... பந்தயமா? ஆ ஆ.. பந்தயமா?

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை?
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை?

நின்னு கோரி... நின்னுக்கோரி... நின்னு கோரி போல் நான் ... நின்னுக்கோரி உன்னாலதான் .. நின்னுக்கோரி... கோரி ...

வெயில் மழை வெட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை
ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை
மறவேனே!
முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன்
என சொல்லும் படி நினைவில்லை..
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை..
மறவேனே!
வெயில் மழை வெட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை
ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை
மறவேனே!
முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன்
என சொல்லும் படி நினைவில்லை..
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை..
மறவேனே!
ராசாளி..... பந்தயமா? ஆ ஆ.. பந்தயமா?

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை?
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை?

மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல...
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ..
குளிர் காய்கின்ற தீ...
என் தோள் மீது நீ..
குளிர் காய்கின்ற தீ...
குளிர் காய்கின்ற தீ...
குளிர் காய்கின்ற தீ

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.