குடும்பம் - கூட்டத்தில் தொலைந்தாலும் எதிர்கொள்ள குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்!
வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் என எதை பார்த்தாலும், இந்த இடத்தில குழந்தையை காணவில்லை, இந்த குழந்தையை அந்த இடத்தில் கண்டுபிடித்தார்கள், பெற்றோர் விபரம் தெரியவில்லைன்னு நியூஸ்.
இது போன்ற செய்திகளை ஷேர் செய்வதை தாண்டி எத்தனை பேர் சீரியஸாக படித்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
ஆனால் இந்த மாதிரி செய்தியில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.
அது, குழந்தைகளை இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை கையாள தயார் படுத்தி வைப்பது.
எந்த ஒரு அம்மாவும் தன் குழந்தை தொலைந்து போக கூடும் என்று நினைப்பதில்லை.
ஆனால் நினைக்காததும் நடப்பது தானே வாழ்க்கை?
எனவே எதிர்பாராத சூழலையும் எதிர்கொள்ள குழந்தைகளை சின்ன சின்ன விஷயங்களின் மூலம் தயார் செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு முதலில் அவர்களின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் வீட்டு முகவரியை சொல்லி கொடுங்கள் (மிகவும் சிறிய குழந்தை என்றால் உங்கள் வீடு இருக்கும் பகுதியின் பெயரை மட்டுமாவது சொல்லிக் கொடுங்கள்).
அதே போல ஏதாவது ஒரு தொலை பேசி அல்லது அலைபேசி எண்ணையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
போலீஸ், தீயணைப்பு படை, ஆம்புலன்ஸ் போன்ற பொது விபரங்களையும் சொல்லிக் கொடுங்கள்.
குழந்தைகள் என்ன, ஏது என்று விபரம் கேட்கும் போது அதை உதாசீனப் படுத்தாமல் முடிந்த அளவில் அவர்களுக்கு புரியும்படி விளக்குங்கள்.
இது எல்லாமே ஏதேனும் வகையில் அவர்களுக்கு உதவக் கூடும்.
{kunena_discuss:747}