Jokes - Anusha
பட்டிமன்றத்தில் கேட்டு ரசித்தது....!
சனிப் பெயர்ச்சி என்றால் என்ன?
ஒரு புதுமணத் தம்பதி கோவிலுக்கு நடந்து சென்றனர்.
புதுப்பெண் கவனக் குறைவால் பாதையில் இருந்த சிறுகல்லில் கால்விரல் மோதிக் கொள்ள, வலியால் ஆ என குரல் எழுப்பினாள்.
உடனே பதறிப் போன அவள் கணவன் குனிந்து அந்த சிறுகல்லை கையில் எடுத்து,
"சனியன் பிடிச்ச கல்" என்று கோபமாக சொல்லி கல்லை தூர எறிந்தான்.
அடுத்த ஆண்டும் அந்த தம்பதியினர் கோவிலுக்கு நடந்து சென்ற போது மீண்டும் அந்த பெண் கல்லில் காலை மோதி ஆ என் அலற, உடனே அவள் கணவன்,
"சனியனே பார்த்து நடக்க கூடாதா" என்று கோபமாக கத்தினான்.
கடந்த ஆண்டு கல்லில் இருந்த சனி, இந்த ஆண்டு மனைவியிடம் பெயர்ச்சி அடைந்துவிட்டது.
இது தான் சனிப் பெயர்ச்சி!!!!