Health Tip # 58 - பாத வெடிப்பை சரி செய்வது எப்படி?
வெடிப்பு எதனால் ஏற்படுகிறது?
பாதங்களில் உள்ள ஈரப்பசை போய் வறண்டு போகும் போது வெடிப்பு ஏற்படுகிறது.
நீரில் அதிகம் நேரம் நின்றிருந்தால், அதிக நீர் ஊறி பாதத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசை வெளியேறி விடும். இதனால் வெடிப்பு ஏற்படுகிறது.
அதே போல வெறும் பாதத்துடன் வெகு நேரம் இருந்தாலும் வரட்சி ஏற்பட்டு வெடிப்பு ஏற்படும்.
உடல் எடை அதிகாக இருந்தாலும் பாதத்திற்கு அதிகமான அழுத்தம் கொடுக்க நேர்வதால் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது பாதங்களை வெடிப்புகள் இல்லாமல் வைக்கவும் உதவும்.
வெடிப்பினால் ஏற்படும் பிரச்சனைகள்
- வெடிப்புகள் நிறைந்த பாதம் அழகில்லாமல் இருக்கும்.
- பாத வெடிப்பை சரியாக கவனிக்காமல் விட்டால் அதிக அளவு வலியை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும்.
- முற்றி போன நிலையில் வெடிப்பில் இருந்து ரத்தக் கசிவும் எற்படலாம்.
வெடிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?
இயன்ற அளவில் காலணிகள் அணிவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இதன் மூலம் பாதங்களில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசை போகாமல் பாதுகாக்கலாம்.
வெளியே சென்று வந்தால் பாதங்களை தண்ணீர் கொண்டு நன்றாக கழுவுங்கள்.
இது பாதங்களை வறண்டு போகாமல் இருக்க உதவும்.
அதிகமான தண்ணீர் குடியுங்கள்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் சருமத்தில் ஈரப்பசையை பெற தண்ணீர் உதவும்.
தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.
பாதங்களை ஈரப்பசையுடன் வைக்க இவை உதவும்.
{kunena_discuss:1131}