நான் படித்து ரசித்த பொன்மொழிகள் - சந்தியா
1. நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? வாழ விரும்பினால், நேரத்தை வீணடிக்கவேண்டாம். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது .
_ பெஞ்சமின் பிராங்க்ளின்
2. மற்றர்களிடம் ஏற்பட்டால் எதைக் குற்றம் என்று நாம் எண்ணுகிறோமோ அதுவே நமக்கு ஏற்பட்டால் சோதனை என்று அழைக்கிறோம்.
_எமர்சன்
3. உலகில் வெற்றியும் தோல்வியும் மனத்தின் திறமையால் நிருணயிக்கப்படுவதில்லை. மனப்பான்மையில் தான் நிருணயிக்கப்படுகின்றன
_ வால்டர் ஸ்காட்
4. ஆசை அதிகமானால், நிம்மதி பறிபோகும் என்பதை அறிந்தவன் புத்திசாலி.
__ சாணக்கியன்
5. கனவுகள் கசப்பான நிகழ் காலத்திலிருந்து தப்பிபதற்கல்ல; வளமான எதிர்காலத்தை ஒத்திகை பார்ப்பதற்கு.
__ பாரதியார்
6. உலக ஆசை பாவங்களின் வேராகும். நீ அதிகமாக விரும்பினால் அது உன்னைக் குருடனாகவும் செவிடனாகவும் மாற்றிவிடும்.
__ நபிகள் நாயகம்
7. நம்மால் முடிந்ததை யொல்லாம் செய்யத் தொடங்கிவிட்டால் நம்மைப் பார்த்து நாமே அதிசயிப்போம்.
__ தாமஸ் ஆல்வா எடிசன்
8. முதியவர் ஓருவருக்கு அளிக்கப்படும் கௌரவம் கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதையாகும்.
__நபிகள் நாயகம்
9. பேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துதல்லை.
__ பகவத்கீதை
10.அப்பா ஆயிரம் நண்பர்களுக்குச் சமம்; அம்மா ஆயிரம் அப்பாக்களுக்குச் சமம்.
__ எமர்சன்
Hi friends உங்கள் கருத்துகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன . எனக்கு மேலும் எழுத ஆசையைக் கூட்டியது உங்கள் கருத்துகள் தான். உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி.