நான் படித்து ரசித்த பொன்மொழிகள் - சந்தியா
1. பொறாமை மடமைக்கு ஒப்பானது; போலித்தனம் தற்கொலைக்கு ஒப்பானது. __ எமர்ஸன்
2. உங்கள் நண்பர்களிடம் என்றும் பேசதகாதவை ஏழ்மையும் வறுமையும். __ ஒளவையார்.
3. ஒழுக்கம் பிச்சைக்காரர் உருவில் இருந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்கப்படும். __ ரஸ்கின்
4. பணம் சேரும்போது சேமித்து வைக்காதவன் ஏமாளி. பணத்தை இழந்து நின்றவன் மிகவும் பரிதாபத்துக்குரியவன்; இவர்கள் இருவர்களையும்விட, என்றும் ஏழ்மையாக இருப்பவவன் மிகவும் சிறந்தவன் ஆவான்.__ ஓர் அறிஞர்.
5. குழந்தை உள்ளம் கொண்ட பெண்ணைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்தான். __ கார்டன்.
6. ஒன்றை எளிதில் தொடங்காதீர்கள்; தொடங்கிவிட்டால் விட்டுவிடாதீர்கள். __சாண்ட்ரா பிரான்சிஸ்.
7. வெற்றியாளனுக்கும் தோல்வியானுக்கும் இருக்கும் இடைவெளி தகுதிக் குறைவல்ல ஆர்வக் குறைவு. __தயாநிதி.
8. பகைவரின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் நன்று. __ ஹேம்ஸ்ஹேவெல்.
9. ஆற்றல் இருந்தால் போதுமா அன்பும் இருக்க வேண்டும் .__ வால்டேர்.
10. எந்த வேலையைலயும் தன் விருப்பத்துக்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனே அவனே அறிவாளி .__ விவேகானந்தர்.