(Reading time: 2 - 3 minutes)

எழுத்தாளர்களும், அவர்களின் அறிமுகமும் – ராஜேஷ்குமார்

பிரபலமான தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகமான நாவல் பற்றிய தகவல்களை பகிரும் பகுதி இது.

ந்த வாரம் க்ரைம் மன்னன் என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ராஜேஷ்குமார் அறிமுகமான நாவலை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

    

ராஜேஷ்குமாரின் முதல் நாவல் மாலைமதியில் வெளியானது. பிரபலமான தமிழ் பத்திரிக்கை குமுதம் குழுமத்தை சேர்ந்த பத்திரிக்கை மாலைமதி.

   

ராஜேஷ்குமார் அதற்கு முன் குமுதத்திற்கு சிறுகதை எழுதி உள்ளார்.

  

அன்றைய காலத்தின் குமுதம் ஆசிரியராக இருந்த எஸ்.ஏ.பி, சென்னை எக்மோர் ரயில் ஸ்டேஷனில் ஒரு போர்ட்டர் வாடிக்கையாளர்களை கூட கண்டுக்கொள்ளாமல் ஆர்வத்துடன் ராஜேஷ்குமாரின் கதை படிப்பதைப் பார்த்து அதிசயப்பட்டு போனார்.

  

அந்த அளவிற்கு ராஜேஷ்குமாரின் எழுத்து அருமையாக இருப்பதை புரிந்துக் கொண்டு அவருக்கு நாவல் எழுதும் வாய்ப்பு கொடுத்தார்.

    

அது தான் வாடகைக்கு ஒரு உயிர் எனும் ராஜேஷ்குமாரின் முதல் நாவல்.

   

எஸ்.ஏ.பி யின் மதிப்பீடு எவ்வளவு அருமையானது என்பதை ராஜேஷ்குமார் தன் எழுத்தினால் நிருபித்துக் காட்டி இருக்கிறார்.

   

1500க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி இருக்கும் ராஜேஷ்குமார் இன்றும் க்ரைம் கதைகளின் முடி சூடா மன்னனாக திகழ்கிறார் என்று சொன்னால் மிகையல்ல.

2 comments

  • இந்த புதிய பகுதி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று! வரவேற்கிறேன்! இப்பகுதியில், சில்சீ சிறப்பு நட்சத்திர எழுத்தாளர்களைப் பற்றியும் அறிமுகப்படுத்தலாமே!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.