ஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 01 - தங்கமணி சுவாமினாதன்
1.பழையதானாலும் கங்கை நீர்,துளசி,வில்வம் இவற்றை மீண்டும் உபயோகிக்கலாம்..
2.வில்வத்தை மூன்று இலை உள்ளதாகவும் துளசியைக் கொத்தாகவும்.புஷ்ப்பத்தை முழுதாகவும் (காம்புகளை நறுக்கி) பூஜை செய்ய வேண்டும்.
3.ஒரு தடவை வில்வம் ,துளசி இவற்றால் ஸ்ரீகிருஷ்ணனை பூஜிக்க வைகுண்டத்தை அடையலாம் (ஸ்ரீ மௌத்கல்யர்)
4.தேய்பிறை அஷ்டமியில் பால்,தயிர்,நெய்யால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பல பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி குழந்தை இல்லாதவர்க்கு அப் பாக்கியம் ஏற்படும்.
5.சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால், தயிர் இவற்றைக் குடிப்பது பாபம்.சந்தன ஜலத்தை மட்டும் ஸ்ரீ பாத தீர்த்தம் சரணாம்ருதம் என்று சொல்லிப் பருகலாம்.
6.அபிஷேகம் செய்யப்பட்ட ஜலம், அர்ச்சனை செய்யப்பட்ட புஷ்ப்பம் இவை நிர்மால்யம் எனப்படும் இவற்றைக் கால் படாத இடங்களில் கொட்டி பின்னர் கைகளை அலம்ப வேண்டும்.
7.சிவ பூஜைக்கு.. வில்வம்,அருகு,தும்பை,தாமரை,மந்தாரை,கொன்றை,செண்பகம்,முல்லை,ஜாதி,மல்லிகை,பவழமல்லி,செத்தி,ஊமத்தை,வெள்ளெருக்கு,ஆம்பல், செவ்வந்தி,சம்பங்கி..முதலியன மிகவும் விசேஷம்.
8.கூடாதவை;-
வினாயகரை....துளசியாலும்
விஷ்ணுவை.....எருக்கு,ஊமத்தையாலும்
சிவனை.......துளசி,தாழம்பூ,செம்பருத்தியாலும்
சூரியனை....வில்வத்தாலும்
அம்பிகையை......அருகம்புல்லினாலும்
ஸ்ரஸ்வதியை.....பவழமல்லியாலும்
பூஜிக்கக்கூடாது.
9.ஸ்வாமி சன்னதியிலும் வீட்டு வாசலிலும் அரிசி மாவால் மட்டுமே கோலமிடுதல் வேண்டும்.
10."தன் நம இத்யுபாஸீத,நம்யந்தேஸ்மை காமா:'நம:நம:
என்று தினமும் மூன்று முறை பக்தியோடு சொல்லி வர ..நியாயமான விருப்பங்கள் நிறைவேறும்.
*குறிப்பு:-
கதையோ,கவிதையோ யார் ஒருவரும் தாமாகத் தன் சொந்தக் கற்பனையில் எழுதலாம். அனால் ஆன்மிகம் சம்பந்தப் பட்டதை அப்படி தன் விருப்பப் படி எழுதி விடமுடியாது.தேவர்களாலும் முனிவர்களாலும் சொல்லப்பட்டு காலம் காலமாய்ப் பின்பற்றப் பட்டு வரும் ஆன்மிகச் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லும் சில ஆன்மிக நூல்களிலிருந்தே இவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேன்.எழுதி எழுதி முடிக்க முடியாதது.. இதற்குக் கிடைக்கும் வரவேற்ப்பைப் பொறுத்தே மேலும் எழுதவேண்டுமல்லவா?..நன்றி..
ஆன்மிகம் வளரும்.....