நாம் ஏன் பிரதட்சணம் செய்கிறோம்?
பிரதட்சணம்
கோவிலில் கடவுளை வணங்கிய பிறகு கர்ப்ப கிரகத்தை சுற்றி வலம் வருவதை பிரதட்சணம் என்கிறோம்.
நாம் ஏன் பிரதட்சணம் செய்கிறோம்?
மையப் புள்ளி இல்லாமல் ஒரு வட்டம் வரைய முடியாது.
இறைவன் தான் நம் வாழ்வின் மையம், ஆதாரம் மற்றும் சாரம். நம் வாழ்வின் மைய புள்ளியாக அவரை ஏற்றுக்கொண்டு, நம் அன்றாட வேலைகளை செய்கிறோம்.
இது தான் பிரதட்சணம் செய்வதின் காரணம் ஆகும்.
மேலும், ஒரு வட்டத்தின் சுற்றளவில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் அதன் மையத்தில் இருந்து சம தூரத்தில் உள்ளது.
அதே போல், நாம் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும், அனைவரும் இறைவனுக்கு நெருக்கமாக தான் இருக்கிறோம். அவரது கருணை பாரபட்சம் இல்லாமல் நம் அனைவருக்கும் கிடைக்கிறது!