சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை
உலகம் போற்ற வாழும் அதிசயபிறவியே
வாழ்கையின் தத்துவத்தை புரிந்து கொண்ட இமயமலை விரும்பியே !
உன்னைப் போல் ஒருவர் இந்த உலகில் இல்லை!
நீ கலைத்தாய் கண்டெடுத்த தமிழகத்தின் பிள்ளை
சோம்பல் ஒன்றே உனக்கு பகை
சுறுசுறுப்பே உனக்கு உறுதுணை!
வானத்தில் உள்ள நட்சத்திரம் அல்ல நீ ,
கைக்கு எட்டாமல் இருக்க.
பூமியில் மின்னும் நத்ச்சதிரம் நீ
ரசிகர் நெஞ்சில் என்றென்றும் ஜொலிக்க!
கோடிகள் குவிந்தாலும் நீ கோபுரத்தில் வாழ்வதில்லை
எளிமையாக வாழ்வதால் நீ கோபுரத்தை விட தாழ்ந்தவன் இல்லை! !
இன்பமாய் வாழ்ந்தால் எவரும் இறைவனை நினைப்பதில்லை
உனக்கு எவ்வளவு இன்பம் வந்தாலும் நீ இமயமலையை மறப்பதில்லை!
உன்னைப் போல உயர எல்லோரும் நினைப்பதுண்டு
அனால் உன்னைப் போல் உழைக்க எவரும் நினைப்பதில்லை!
நீ நடக்கும் போது கேட்குது குதிரை ஓடும் சத்தம்
அதை பார்க்கும் போது உனக்கு வயதாகவில்லை என்றே
எங்கள் நெஞ்சங்கள் நினைக்குது நித்தம்!
நிலவுக்கு உண்டு மாதத்தில் பாதி நாள் தேய்பிறை
ஆனால் உன் புகழுக்கு என்றென்றும் வளர்பிறை!
கோடான கோடி நெஞ்சங்கள் மகிழ ,
நீங்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ ,
வாழ்த்தி வணங்குகிறோம் தலைவா !!!