மரங்களும் அவளும் - சுமதி
நீங்கள் மட்டும் என்னை
அணு அணுவாய் சிதைக்கிறீர்கள்!
அவள் நினைவுகளை மட்டும்
உயிரோடு புதைக்கிறீர்கள்!
புதிதாய் கொழுந்துவிட்டால்
அன்று முளைத்த அவள்
நேசத்தை சொல்கிறீர்கள்!
அதிகாலை பனித்துளியில்
சிலிர்த்து நின்றால்
அவள் பூ முகத்தை சொல்கிறீர்கள்!
காற்றோடு சலசலத்து
மனம்கனிந்து நின்றால்
அவளது கலகலப்பான பேச்சை சொல்கிறீர்கள்!
பளீரென்று பூக்கள்
உதிர்ந்து நின்றால்
அவளது புன்சிரிப்பை சொல்கிறீர்கள்!
எரியும் வெய்யிலில்
என் நிழலெழில் நின்று கொண்டு
அவளது பாசத்தை சொல்கிறீர்கள்!
அவ்வப்போது ஆடாது அசையாது
அமைதிக்குடை பிடித்தால்
அவளது மௌனத்தை சொல்கிறீர்கள்!
நீர் இருக்கும் இடமெல்லாம்
வேர்பரப்பி நின்றால்
அவளைக் காணத தேடலை சொல்கிறீர்கள்!
கிளை தாங்கும் விழுது
காட்டி நின்றால்
அவளது ஞாபகங்களை சொல்கிறீர்கள்!
இலை தலை உதிர்ந்து
மொட்டை மரமானால்
அவள் இல்லாத வாழ்க்கையை சொல்கிறீர்கள்!
நானும் அவளும் ஒன்று தானோ???
{kunena_discuss:779}