(Reading time: 2 - 3 minutes)

கவிதை - அன்பு மகன்களே  - சுமதி

Father

அன்பு மகன்களே 

ஒரு கையிலாகாத அப்பாவின் கதறல்

பெண் குழந்தை பிறந்து என்று

எல்லா தகப்பனைப்போல 

நானும் முகம் சுழித்தேன்

ஆனால்அது குழந்தையை

கையில் வாங்கும் வரைதான்

அதன்பின் தேவதையின்

தகப்பன் நான் என்ற

பெருமை இந்த ஜென்மத்துக்கு 

போதும் என நினைத்தேன்

அந்த குட்டி விரல் 

என் கையை பற்றிய 

அந்த கணம்

அந்த ஸ்பரிசம்

என் வாழ்க்கையின் 

நிறைவை சொல்லியது

அந்த கணம் சொல்லியது

இப்போது பற்றும் இந்த விரல்

கணவனின் கரம் பிடித்து 

தரும் வரை என் கரத்தின்

பிடியில் தான் ஆயிரம் கதை

பேசுமென்று உணர்ந்தேன்

முத்தமிடும்போது மீசை

குத்தியதால் முகம் சுருக்கினாள்

மீசைதான் ஆண்களின் கம்பீரம்

என்று சொல்லித்திரிந்த நான்

அப்போதே எடுத்து விட்டேன்

அப்போதே முடிவு செய்தேன்

மகள் முகம் சுருக்கும் எந்த செயலையும் செய்வதில்லை என்று

என் மனைவி திட்டுவாள்

பெண் குழந்தைக்கு இவ்வளவு

செல்லம் ஆகாதென்று என்று

என் தேவதைக்கு நான்

கொடுக்காமல் யார் கொடுப்பார் என்பேன்

அப்பா என்ற அழைப்பில்

உலகத்தில் உள்ள அனைத்து

அன்பையும் காண்பிப்பாள்

வீட்டிலிருந்தால் எனக்கு தலைகோதவும் தலைசீவவும்

அவளுக்கு நேரம் போதாது

கண் சுருக்கும்போதே அவளின்

காரணம் புரிந்து அதை செய்வேன்

இன்னும் இன்னும் எத்தனையோ

கடலில் எவ்வளவு தண்ணீர்

உள்ளது என்பதை எப்படி

அளவிட முடியாதோ அப்படித்தான்

அப்பா மகள் பாசம்

அதை தேவதையைப் பெற்ற 

சேவகர்களுக்குப் புரியும்

முகம் சுருக்காமல் வளர்த்த 

எங்கள் தேவதையை முள்ளாக

குத்தி பலாத்காரம் என்ற படுங்கொலை

செய்யும் என்பில்லா மகன்களே

அதை தடுக்க வலியில்லாது

பாவியாகி நிற்கும் ஒவ்வொரு

தகப்பனின் கதறல்

உங்கள் காதுகளில் கேட்குமா???

எங்கள் உள்ளத்தின் அலறல் ......

 


{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.