போதுமே!
உன்னை மன்றாடி கேட்கிறேன்,
நீ பாசம் வைத்த ஒரு இதயம் ,
உன்னை துச்சமாக எண்ணினால்,
மேலும் பாசம் வைக்காதே....
அப்படி நீ மேலும் பாசம் வைக்க,
அதை அந்த இதயம் மேலும் புறக்கணிக்க,
அப்பப்பா..... நீ படும் பாட்டை என்னால் சகிக்கவும் முடியாது....
நீ இல்லாமல் வாழவும் முடியாது...
ஆகையால் தான் கூறுகிறேன் - இதயமே
உன்னை மதிக்காத இதயத்தை எண்ணாதே...
நாம் இந்த பூவுலகில் சேர்ந்து வாழ,
உனக்கு நான் – எனக்கு நீ மட்டும் போதுமே......