(Reading time: 1 minute)

போதுமே! 

உன்னை மன்றாடி கேட்கிறேன்,

நீ பாசம் வைத்த ஒரு இதயம் ,

உன்னை துச்சமாக எண்ணினால்,

மேலும் பாசம் வைக்காதே....

அப்படி நீ மேலும் பாசம் வைக்க,

அதை அந்த இதயம் மேலும் புறக்கணிக்க,

அப்பப்பா..... நீ படும் பாட்டை என்னால் சகிக்கவும் முடியாது....

நீ இல்லாமல் வாழவும் முடியாது...

ஆகையால் தான் கூறுகிறேன் - இதயமே

உன்னை மதிக்காத இதயத்தை எண்ணாதே...

நாம் இந்த பூவுலகில் சேர்ந்து வாழ,

உனக்கு நான் – எனக்கு நீ மட்டும் போதுமே...... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.