உண்மை - கவிதை போட்டி - 05 - சகி
வானவேடிக்கையினில் வெடித்து சிதறிய வண்ண வண்ண மலர்களின் இதழ்களில் வசித்து வருகின்றேன்!!!!!
எழுதுக்கோலில் மை வற்றி வானத்திடம் இரவல் வாங்கி இயற்றுகிறேன்!!!!
பெண்மையின் தாய்மை பற்றி எழுதுவதற்கே!!!
அழகிய கவிதையே!!!!
பா வகையினில் சிக்காத பல கனவுகளை இனிக்க நினைவாக்கியவள் நீயோ??
பாரினை காக்க பாவங்களை அழிக்க அவதரித்த ஆண்டவன் உருவம் நீயோ??
நீயே....
அன்று அக்னியில் வாசம் புரிந்து அக்னிக்கே மோட்சம் அளித்தாய்....!
மகாபாரதமாய் தர்மத்தை விதைத்து பரிசுத்ததின் உச்சமானாய்!
நீதி கேட்டு பத்தினியாய்,
பாரினில் உன்னை பதிய வைத்தாய்!!!!
பேதையானாய்...
பெதும்பையானாய்....
மங்கையானாய்....
மடந்தையானாய்...
அரிவையானாய்......
தெரிவையினாய்....
பேரிளம்பெண்ணானாய்....அனைவருக்கும் தாயானாய்...
இதோ....என் கவிதைக்கு கருவானாய்!!!!தர்மத்தின் திரு உருவாய் இருக்கும் பெண்ணே....
உன்னை தவிர வேறு கவிதை இருக்குமா??
உலக மொழிகளில் நான் எழுத???
பெண்மை இவள் அகிலத்தைத் தாங்கும் பேர் உண்மை!!!!!