துணிந்து எழு பெண்ணே !!! - கவிதை போட்டி - 08 - ப்ரியா
உன்னை பற்றிய பெருமை தனைப் பேச
இன்னொரு பாரதி பிறக்கவில்லை!!
துகிலுரிக்கையில் மானம் காக்க
நவீன கண்ணனுக்கு நேரமில்லை!!
உன் சபதம் தனை தலைமேற் கொண்டு
போர் புரிய பாண்டவர் எவருமில்லை !!
பெண்ணிற்காய் இதிகாசங்கள் எழுந்த தாய்மண்ணில்
நம்பிக்கையுடன் பிறந்துவிட்டாயடி பேதை பெண்ணே!!
பிறப்புரிமை கேட்டாய்
சொத்துரிமை கேட்டாய்
எதுவாகிலும் சமபங்கது வேண்டுமென யாசித்தாய்!!
அவள் இல்லாமல் அனுவுமில்லயாம்!!
பிறகு எதற்கடி யாசகம்???
இனியும் தேவையில்லை தாமதம்
துணிந்து எழுந்து செயல்படு
கயவர்களை அழித்து முன்னேறு
இனி உலகமே உன் வசம்!!!!