கவிதை - கனவை மறைத்து நினைவில்..!! - ப்ரியா
தொலைவினில் உன் வருகை..
முகம் பார்க்க ஓடி வந்து
முடியாமல் திணறி நின்று
முடிவற்ற சண்டைகளுக்காக
கோபத்தின் சாயம் பூசி
வார்த்தைகளால் உன்னை பந்தாடி
உன் சட்டையை பற்றி
கேள்விகள் கேட்டு
வழியும் கண்ணீரை பிடிவாதமாய்
துடைத்துக் கொண்டு..
கோபம் வெளுக்க
கெஞ்சலில் இறங்கி
கொஞ்சல் மொழி கேட்க
ஆசை கொண்டு..
உன் மௌனம் தூண்ட
மீண்டும் கோபம் பூசி
உன் மார்பில் அடித்து
கன்னம் அறைந்து
பிடிவாதம் கைவிட்டு
அரற்றி அழுது தவிக்கிறேன்
தினமும் கனவில்...
ஏதோ ஒன்றை நீ பேச முயல
'நீ வேண்டாம் போ'
என்று எட்டி நடக்கிறேன்...
கனவை மறைத்து நினைவில்...
{kunena_discuss:779}