(Reading time: 1 - 2 minutes)

பெண்மை (க்கு விடுதலை) - கவிதை போட்டி - 14 - வைதேகி ஆராவமுதன்

பெண் விடுதலை கிடைத்த தென்று

கும்மி கொட்டி பாடு

பெண்கள் நாட்டின் கண்கள் என்று

பெருமையுடன் கூறு

 

அடுப்பூதும் பெண்களுக்கு

படிப்பறிவு எதற்கு

அந்த வார்த்தை மாறி இப்போ

விடுதலை கிடைச் சாச்சு

 

பதுமையாக இருந்த பெண்கள்

பாரைச் சுற்றலாச்சு

அடிமையாக இருந்த பெண்கள்

அரசை ஆள லாச்சு

 

கூட்டுப் புழுவாய் நெளிந்த பெண்கள்

ஏட்டைப் படிகலாச்சு

கூண்டுக் கிளியாய் வாழ்ந்த பெண்கள்

வானில் பறக்க லாச்சு

 

கரண்டி பிடித்த கைகள் இன்று

கரன்சி எண்ணலச்சு

கட்டையை அடுப்பில் தள்ளிய கைகள்

ஸ்டியரிங் பிடிக்கலாச்சு

 

இத்தனை உரிமை கிடைத்த பின்பும்

இன்னும் குறை இருக்கு

இள மங்கை இதயத்திலே

ஏக்கம் நிறைய இருக்கு

 

வரதட்சினை தீயில் போட்டு

வாட்டப்படும் பெண்கள்

வளமான வாழ்கைக்காக

ஏங்கித் தவிக்கும் கண்கள்

 

பெண் சிசுவைக் கொன்று விடத்

துடிக்கும் அரக்கப் பேய்கள்

பகுத்தறிவு பெற்றால் தான்

ஒழியும் மூட நோய்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.