என் மழைக் காதலா..!
ஏன் கண்ணீராய் பொழிகிறாய்
என்னை குளிர்விக்கவா -என்
மழைக் காதலா..!
நானும் மகிழ்ந்தேன் உன்னால்
உன்னதமான தென்றல் காற்றால் ..
இருள் சூழ்ந்த வெளிச்சம் - நினைவூட்டியது
என் தாயின் கருவறையை
வெட்கத்தில் பூத்தன பூக்கள் - உன்
நீர்த்துளியை சுமந்ததால் ..
என் பாதங்கள் சிலிர்த்தன - உன்னால்
நீ குளிரூட்டிய புல்மேட்டால் ..
விழிகள் விரிய வியப்பு
இதழ்கள் முழுவதும் புன்னகை
உருகினேன் பனித்துளியாய் - எல்லாம்
உன்னால் தான் என் மழைக் காதலா..!