(Reading time: 1 minute)

என் மழைக் காதலா..! 

ஏன் கண்ணீராய் பொழிகிறாய்

என்னை குளிர்விக்கவா -என்

மழைக்  காதலா..!

 

நானும் மகிழ்ந்தேன் உன்னால்

உன்னதமான தென்றல் காற்றால் ..

 

இருள் சூழ்ந்த வெளிச்சம் - நினைவூட்டியது

என் தாயின் கருவறையை

வெட்கத்தில் பூத்தன பூக்கள் - உன்

நீர்த்துளியை சுமந்ததால் ..

 

என் பாதங்கள் சிலிர்த்தன - உன்னால்

நீ குளிரூட்டிய புல்மேட்டால் ..

 

விழிகள் விரிய வியப்பு

இதழ்கள் முழுவதும் புன்னகை

உருகினேன் பனித்துளியாய் - எல்லாம்

உன்னால் தான் என் மழைக் காதலா..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.