(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல் கடிதம் - சுதாகர்

Love letter

எப்போதோ எழுதிய

என் முதல் காதல் கடிதத்தை

மீண்டும் புரட்டிப் பார்க்கிறேன்

 

எங்கே இருக்கிறான் அவன்

தாவணி காட்டத் தொடங்கிய  வயதில்

என்னை தவிக்க விட்டவன்

தட்டுத் தடுமாறிய என்

வெட்கத்தை கிள்ளி விட்டவன்

எங்கே இருக்கிறான் அவன்

 

எங்கே இருக்கிறாயடா

உனக்கு எழுதிய முதல் கடிதம்

"உன்னை காதலிக்கிறேன்"

மக்கிக் கிடக்கும் காகிதத்தில்

மங்கிக் கிடக்கும் அந்த வார்த்தைகளை

தடவிப் பார்க்கிறேன்

 

இது தான் முதலும் கடைசியுமான கடிதம்

 

தேடித் தேடி உன்னை காதலித்தவள் நான்

மறந்து போன 'அ'ணா 'ஆ'வணணா வை

எழுதிப் பார்க்க வைத்தவன் நீ

தொலைந்து போன தமிழ்

புத்தகத்தை தேட வைத்தவன் நீ

 

தாவணி கட்டும் போதெல்லாம்

ஏங்கி ஏங்கி

வெட்கப் பட்டு இருக்கிறேன்

 

பள்ளி பருவத்தில் எப்போது

என்னை பார்ப்பாய்

என்ற கற்பனையில்

கரைந்திருக்கிறேன்

 

நீண்ட இடைவெளிக்கு பின்பு

இன்று மீண்டும்

ஒரு காதல் கடிதம்

 

நிச்சயம் இது உன்னை

வந்தடைய போவதில்லை

நீ எங்கிருக்கிறாய் என்று

தெரியவும் தேவயில்லை

 

இது எனக்காக நானே

எழுதிக்கொள்ளும் காதல் கடிதம்

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.